News Update :

Thursday, November 19, 2015

thumbnail

ஹலாலான உழைப்பின் சிறப்பு

Thursday, November 19, 2015



இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் – விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் – விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)
Read More»

0 comments:

Thursday, November 5, 2015

thumbnail

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க

Thursday, November 5, 2015



கலோரிகளை குறைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு நாளைக்கு 1700 கலோரிக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தவிர்க்க வேண்டிய உணவுகள் பால் பொருட்கள், மாவுப் பொருட்கள், எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள், மட்டன் மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

வேண்டுமெனில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் சாப்பிடலாம் மற்றும் தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவது நல்லது. ஆனால் முட்டையை மஞ்சள் கருவைத் தவிர்க்கவும். ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.


கொத்தமல்லி கொத்தமல்லி ஜூஸ் அல்லது சூப்பை தினமும் சிறிது குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்
தண்ணீர் தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

 முக்கியமாக உணவு உண்பதற்கு முன் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உண்ணும் உணவின் அளவு குறையும். அதேப் போல் உணவை உண்டு 15 நிமிடங்களுக்கு பின் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.


கொள்ளு கொள்ளுவை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து பொடி செய்து கொள்ள, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 டீஸ்பூன் கொள்ளு பொடியை வாயில் போட்டு சாப்பிட்டு, அதனைத் தொடர்ந்து 1 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.


இரவு உணவு எப்போதும் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொள்ள வேண்டும். ஒருவேளை உணவு உண்டவுடன் தூங்கினால், உடலால் கொழுப்புக்களை எரிக்க முடியாமல், ஆங்காங்கு தேங்க வைத்துவிடும்


உடற்பயிற்சி தினமும் தவறாமல் 30 நிமிடம் ஜாக்கிங் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது வியர்வை வடிவில் வெளியேறிவிடும். மேலும் வியர்வை வெளியேற்றிவிட்டால், சருமம் பொலிவோடு காணப்படும். ஒருவேளை உங்களால் ஜாக்கிங் செய்ய முடியாவிட்டால், வீட்டிலேயே 30 நிமிடம் யோகா செய்யுங்கள்.


படிக்கட்டுக்களை பயன்படுத்துங்கள் எப்போதும் லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து, படிக்கட்டுக்களைப் பயன்படுத்துங்கள். இதனால் கொழுப்புக்களை எரிக்க முடியும்.

உண்ண வேண்டிய உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் இரவில் ஓட்ஸ் சாப்பிடுங்கள். இதனால் உடலில் நார்ச்சத்து அதிகரித்து, உடலை பிட்டாகவும், ஸ்லிம்மாகவும் பராமரிக்கலாம். தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். முக்கியமாக மதிய உணவிற்கு முன் 1-2 கப் சாலட் சாப்பிடுங்கள். இதனால் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

காலை உணவை தவிர்க்கக்கூடாது டயட்டில் இருக்கிறேன் என்று காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்தாலே உடல் எடை அதிகரிக்கும். எப்படியெனில் காலை உணவைத் தவிர்ப்பதால், மெட்டபாலிசம் குறைந்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையின் வேகம் குறைந்துவிடும். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, காலை வேளையில் சாலட், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பழச்சாறுகளை அருந்துவது நல்ல பலனைத் தரும்.
Read More»

0 comments:

thumbnail

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.



முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது.

கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள்.

டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது.

இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது.

வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்...!
Read More»

0 comments:

Friday, October 9, 2015

thumbnail

இஸ்ரேலில் அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் கைது

Friday, October 9, 2015

தெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.

மேலும், மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More»

0 comments:

thumbnail

இரண்டு நாட்கள் பயணமாக நாளை மாலைத்தீவுக்கு செல்லும் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்





மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலைத்தீவுக்கு செல்கிறார்.

அங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,

கடந்த 2000மாவது ஆண்டு இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.

தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

தனது பயணத்தின் போது சுஷ்மா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனையும் சந்திக்கிறார்.

இதன்போது அவருடன் பொருளாதாரம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

இதனையடுத்து, இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாலத்தீன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்.

மேலும் மாலத்தீவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் உருவாக வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

ஐ.நாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பொய்யானதா? நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘குற்றவியல் விடயத்தில் சீனாவுடன் இலங்கை ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறது என எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு சரியாகப் புரியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், நிபுணர்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறைக்குள் வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், பொலிஸ் முதலான துறைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்குள் வந்து ஒத்துழைப்பு வழங்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.

இலங்கையின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாற்றத்துக்கான ஆரம்பம் வந்துள்ளது.

ஒரே இரவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நீண்டகாலம் எடுக்கும். இந்தக் காலங்களில் சர்வதேசத்திலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கவலைக்குரிய விடயமொன்றைக் குறிப்பிடுகின்றேன்.

15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த வசந்தி ரகுபதி சர்மா அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இந்த 15 ஆண்டுகளும் அவரின் பிள்ளைகள் வேறு நபர்களின் உதவியுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். வசந்தி ரகுபதி சர்மா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக அவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூறுவது யார்?

கடந்த 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் உள்வாங்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார்.
ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது. மதிப்புக்குரிய தம்பதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸாருக்குத் தகவல் வழங்காத காரணத்தால்தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தாம் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் அந்தத் தம்பதிகள் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தினர்.

இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என நான் கேட்கின்றேன்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 54 கைதிகளை விடுவிக்க முடியவில்லை? இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கவேண்டும்.

அரசியல் தீர்மானம் எடுத்து இந்தக் கைதிகளை விடுவிக்கவேண்டும். இது அரசின் கடமை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு கூறியதைப்போல தாம் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்.

அவை வெறும் வசனங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவமாக்கப்படவேண்டும். இவற்றை உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை, சந்தோஷத்தை வழங்குவதாக இந்த நடவடிக்கை அமையவேண்டும்’ என்றும் கூறினார்.
Read More»

0 comments:

thumbnail

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து வெற்றி





ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை தனதாக்கியது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
Read More»

0 comments:

thumbnail

கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்




முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More»

0 comments:

thumbnail

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை




வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சகல தரப்பினர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வீதி நெரிசல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

வாகன நெரிசல் காரணமாக தொழில் நிமித்தம் செல்கின்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தேசிய வருமானத்தில் பல மில்லியன் ரூபா விரையம் ஏற்படுவதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் தெரிவித்தார்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை அழைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தேசிய திட்டமொன்றை தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளக்கூடிய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Read More»

0 comments:

thumbnail

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்




மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (09) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்குமாகாண முதலமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்தார்.

சுமார் 300 இற்கும் அதிகமான பட்டதாரிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

இதன் போது 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கிழக்குமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
Read More»

0 comments:

thumbnail

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆ ணைக்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பு பேரவை இன்று (09) கூடியபோது இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


இந்த பெயர் விபரங்களை இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தகுதியான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு






துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு (Tunisian National Dialogue Quartet) 2015ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவின் பன்முக ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக் குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் பாடுபட்டது.
Read More»

0 comments:

thumbnail

உணர்வுகளின் வரலாற்றை எழுத்தில் தந்த பெலாரஸ் பெண்ணிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு





2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸ்வெட்லானாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படைப்பிலக்கியத் துறையில் உலகளாவிய சாதனை படைத்ததற்காக, ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸீவிச்சுக்கு (வயது 67) இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழு நேற்று (08) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

‘‘நமது காலத்தின் பாடுகள் மற்றும் துணிச்சலுக்கான நினைவுச்சின்னமாக இவரது பல குரல் கொண்ட எழுத்துக்கள் ஒலித்துள்ளன’’ என நோபல் விருதுக்குழு தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சோவியத் மக்கள் மற்றும் சோவியத்திற்கு பிந்தைய காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து துயரம், ஆப்கானிஸ்தான்– சோவியத் போர் போன்றவற்றின் இவரது பதிவுகளை உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோரை பேட்டி கண்டு, நாம் அறிந்திராத நிகழ்வுகளை தந்திருக்கிறார்.

அதேவேளை, இவர் உணர்வுகளின் வரலாற்றையும், ஆன்மாவின் சரித்திரத்தையும் தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோபல் பரிசினை வென்ற 14 ஆவது பெண் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றார்.
Read More»

0 comments:

thumbnail

முந்தலில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 47 வயதான நபர் கைது




முந்தல் பொலிஸ் பிரிவின் மககும்புக்கடவல பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முந்தல் பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Read More»

0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

    Popular Posts

Discussion

Blog Archive

© 2016 Ayas Mohamed All Rights Reserved.
Designed by Tamil Solution.
back to top